உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செங்கோட்டையில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

Published On 2022-01-11 10:42 GMT   |   Update On 2022-01-11 10:42 GMT
செங்கோட்டையில் முகக்கவசம் அணியாத 20 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.
செங்கோட்டை:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, செங்கோட்டை நகராட்சி ஆணை யாளர் இளவரசன் ஆகியோர் அறிவுரைப்படி, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, சுகாதாரப்பணிகள் மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் ஆகியோர் செங்கோட்டையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், பேருந்துநிலையம் முக்கிய வீதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.  

அப்போது முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200வீதம் அபராதம் விதித்தனர். பின்னர் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர்.
Tags:    

Similar News