செய்திகள்
காவடி எடுத்த நடிகை காயத்ரி ரகுராம்

பழனி கோவிலில் நடிகை காயத்ரி ரகுராம் காவடி எடுத்து வழிபாடு

Published On 2020-10-14 08:23 GMT   |   Update On 2020-10-14 08:23 GMT
பழனி கோவிலில் நடிகை காயத்ரி ரகுராம் காவடி எடுத்து வழிபாடு நடத்தினார்.
பழனி:

நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பழனி மலைக்கோவிலுக்கு வந்தார். காவடி சுமந்து கிரி வீதிகளில் சுற்றி வந்து படிப்பாதை வழியாக மலையேறி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு தனியார் தங்கும் விடுதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. இடம் பெறும் கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும். நாட்டில் தற்போது ஏராளமானோர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். தமிழகத்திலும் இக்கட்சி வளர்ந்து வருகிறது. தற்போது நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியே.

எங்கள் அனைவரையும் பிரதமர் மோடி வழிநடத்தி செல்வார். பாலியல் குற்றங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News