செய்திகள்
திமுக

திமுக பொதுக்குழு 10-ந்தேதி கூடுகிறது

Published On 2019-10-31 04:39 GMT   |   Update On 2019-10-31 09:33 GMT
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதியாகும்.

அந்த அடிப்படையில் தி.மு.க. பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த செப்டம்பர் 6-ந்தேதி கூட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறது. வருகிற 10-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் 6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், வருகிற 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கில் நடைபெறும்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப்பணிகள், உள்ளாட்சி, தேர்தல், கழக சட்ட திட்டத்திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை பற்றி இதில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடக்கும். இப்போது முதல் முறையாக ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

பொதுக்குழுவில் 3,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்காக அன்றைய தினம் பிரியாணி, அறுசுவை உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News