உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-01-26 09:14 GMT   |   Update On 2022-01-26 09:14 GMT
நெல்லை தச்சநல்லூரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்
நெல்லை:

தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கலாசெல்வி (வயது19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 24-ந்தேதி தோழிகளை பார்த்து வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாத்தா ஆறுமுகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாசெல்வி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News