செய்திகள்
டிம் பெய்ன்

கடைசி நாளில் ஏராளமான கேட்ச்களை தவறவிட்ட டிம் பெய்ன்: டுவிட்டர்வாசிகள் ட்ரோல்

Published On 2021-01-11 14:32 GMT   |   Update On 2021-01-11 14:32 GMT
சிட்னி டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் மூன்று கேட்ச்களை டிம் பெய்ன் பிடிக்க தவறியதால், இந்தியாவுக்கு டிரா செய்யும் வாய்ப்பு கிட்டியது.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதற்கு ரிஷப் பண்ட், அஸ்வின், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

அதேவேளையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மூன்று கேட்ச்கள் விட்டது, லாபஸ்சேன் ஒரு கேட்ச் விட்டதும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

ரிஷப் பண்ட் சொற்ப ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு முறை டிம் பெய்ன் கேட்ச் பிடிக்க தவறினார். ஹனுமா விஹாரி பேட்டில் பந்து பட்டு பறந்து சென்றது. இதை டிம் பெய்ன் டைவ் அடித்து பிடிக்க தவறினார்.

அஸ்வின் கொடுத்த கேட்சை லாபஸ்சேன் பிடிக்க தவறினார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டிம் பெய்ன் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அஸ்வினை சீண்டிக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் டிம் பெய்னை ட்ரோல் செய்து வருகின்றனர்.



டிம் பெய்னின் உதடுகளும், கையுறைகளும் மூடவே இல்லை என்றும், விஹாரி கேட்சை சரியாக பிடிக்கவில்லை என்றும், கேட்ச் மிஸ் செய்யபின் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அறையை பார்க்கனுமே... என்றும்

அஸ்வினை சீண்டிய அடுத்த ஓவரில் கேட்ச் தவறவிட்டதை, ஸ்லெட்ஜிங் இறுதிகட்ட ஆயுதம் என்றும், அஸ்வின், விஹாரியை சீண்டுவதற்கு கவனம் செலுத்தி கேட்ச்சை கோட்டைவிட்டு விட்டார் என்றும்,

கேட்ச் பிடிக்க முடியவில்லை, பேட்டிங் செய்ய முடியவில்லை, தற்காலிய கேப்டன், தேவையில்லாமல் பேச மட்டுமே தெரிகிறது என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News