உள்ளூர் செய்திகள்
பனியன் நிறுவனத்தில் வேலையாட்கள் யாரும் இல்லாத நிலையில் நாகராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா கருவலூர், அத்திமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 38). இவர் திருமுருகன்பூண்டியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நாகராஜிக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் தனக்கு வயதாகியும் திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவர் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. உரிய நேரத்தில் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாகராஜ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று பனியன் நிறுவனத்தில் வேலையாட்கள் யாரும் இல்லாத நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.