செய்திகள்
மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம்

மது, போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு

Published On 2019-12-01 18:22 GMT   |   Update On 2019-12-01 18:22 GMT
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை சி.எஸ். ஐ. பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் கலாராணி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அன்புமணி வரவேற்றார். நன்னடத்தை அலுவலர் முருகன், பாதுகாப்பு அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை செல்லமுத்து தொண்டு நிறுவன முதுநிலை சமூக பணியாளர் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மது மற்றும் போதை பொருட்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை குழந்தைகளிடம் விளக்கி கூறினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வேடமுத்து, இம்மானுவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News