செய்திகள்
ஏலகிரிமலையில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில்அதிபர் கடத்தல்
ஏலகிரி மலையில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
ஏலகிரி மலையை சேர்ந்தவர் அருள் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். அவரது மனைவி சாந்தி. இன்று காலை ஏலகிரி மலையில் அருள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அருளை காரில் கடத்தி சென்றனர். நடைபயிற்சிக்கு சென்ற அருள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சாந்தி அவரை தேடி வந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்கள் கணவர் அருளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம்.
ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் அருளை விடுவிப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏலகிரி மலையை சேர்ந்தவர் அருள் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். அவரது மனைவி சாந்தி. இன்று காலை ஏலகிரி மலையில் அருள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அருளை காரில் கடத்தி சென்றனர். நடைபயிற்சிக்கு சென்ற அருள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சாந்தி அவரை தேடி வந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்கள் கணவர் அருளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம்.
ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் அருளை விடுவிப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.