செய்திகள்
களக்காடு அருகே 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
களக்காடு பேரூராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
களக்காடு பேரூராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனைதொடர்ந்து களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
களக்காடு காந்திவீதியில் சென்றபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 250 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் பிளாஸ்டிக் பை வைத்திருந்த தென்காசியை சேர்ந்த காதர்ஷா என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.