ஆன்மிகம்
குழந்தை இயேசு

செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது

Published On 2021-09-30 04:48 GMT   |   Update On 2021-09-30 04:48 GMT
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது. தொடர்ந்து 10-ந் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது.
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று (வியாழக் கிழமை) நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு புகழ் மாலை, தொடர்ந்து திருக்கொடி பவனி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைபெறுகிறது. பின்னர் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.

பங்குத்தந்தை டேவிட் மைக்கிள் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. ஆலய திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது.

8-ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை மார்ட்டின் மறையுரை யாற்றுகிறார். 9-ம் நாள் விழா மாலை 6 மணிக்கு முள்ளூர்துறை பங்குத்தந்தை ஜக்ஸஸ் இளங்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார்.

10-ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சகாய தாசு மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.

அடுத்த மாதம் 10-ந் தேதி திருவிழா நிறைவு நாளில் காலை 8 மணிக்கு அருட்பணியாளர் மரிய அற்புதம் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் டேவிட்மைக்கேல் மறையுரையாற்றுகிறார். திருவிழா நிகழ்ச்சிகள் அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறும் என பங்கு தந்தை மற்றும் பங்குபேரவையினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டேவிட் மைக்கேல், பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணைச் செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபிரியல் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News