உள்ளூர் செய்திகள்
.

தருமபுரி அருகே விவாகரத்து நோட்டீஸ் கணவர் அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை

Published On 2022-04-17 07:32 GMT   |   Update On 2022-04-17 07:32 GMT
தருமபுரி அருகேவிவாகரத்து நோட்டீஸ் கணவர் அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிராஜா, இவரது மனைவி வினோதினி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட தகராறின் போது வினோதினி கோபித்து கொண்டு அரூர் எல்லப்புடையாம் பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

கடந்த 18 ந் தேதி, மணிராஜா வினோதினிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதனை பார்த்த மனமுடைந்த வினோதினி, எலிபேட்டை தின்று மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News