செய்திகள்
மழை

கேரளாவில் தொடரும் மழை- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2021-09-25 05:00 GMT   |   Update On 2021-09-25 07:18 GMT
கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களான இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கேரள வானிலைத்துறை அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று கேரளாவின் ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் உள்பட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாளை கொல்லம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கும் பலத்த மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



எச்சரிக்கை அறிக்கையில் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அடுத்த சில நாட்களுக்கு தயார் நிலையில் இருக்கும் படி கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News