செய்திகள்
சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல், ஸ்டாலின், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நாகராசன் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தலித் பெண் பாலியல் படுகொலையை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.