செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
சேலம் மேட்டூர் அணையில் இருந்து 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த மழையால் கா்நாடக அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மழை சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறையத் தொடங்கியது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மேட்டூர் அணையில் இருந்து 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையின் கிழக்குக்கரை, மேற்குக்கரை கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் கிழக்குக்கரை பாசனப் பகுயில் 45, 000 ஏக்கர் பாசனவசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என கூறியுள்ளார்.