செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2021-01-07 03:24 GMT   |   Update On 2021-01-07 07:45 GMT
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று முதல் ஜன.11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News