செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீது வழக்கு

Published On 2021-06-16 12:30 GMT   |   Update On 2021-06-16 12:30 GMT
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 8 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
குளித்தலை:

குளித்தலை பகுதிகளில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டியைச் சேர்ந்த முருகவேல்(வயது 31), தெற்கு மைலாடியைச் சேர்ந்த ஆறுமுகம்(30), குப்பாச்சிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார்(18), புதுப்பட்டியைச் சேர்ந்த நாகமணி(23), சீகம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(18), திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த நாகராஜன்(32), குளித்தலை காங்கிரஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த பூரணச்சந்திரன்(30), வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்(21) ஆகிய 8 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News