செய்திகள்
அமைந்தகரையில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்- 2 வாலிபர்கள் கைது
சென்னை அமைந்தகரை பகுதியில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை அமைந்தகரை பகுதியில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செனாய் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஜெயின், தி.நகரைச் சேர்ந்த ஜித்தேந்தர் ஆகிய இருவரும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் தி.நகரில் ஆன்லைன் சூதாட்ட மையம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மையத்தை நடத்துவது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை அமைந்தகரை பகுதியில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செனாய் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஜெயின், தி.நகரைச் சேர்ந்த ஜித்தேந்தர் ஆகிய இருவரும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் தி.நகரில் ஆன்லைன் சூதாட்ட மையம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மையத்தை நடத்துவது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.