ஆன்மிகம்
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் நகரில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். இதேபோல் வேதாரண்யம் நகரில் உள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்பவிநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். இதேபோல் வேதாரண்யம் நகரில் உள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்பவிநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.