உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாலிபரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2022-05-06 09:26 GMT   |   Update On 2022-05-06 09:26 GMT
வாலிபரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி:

முசிறி பரிசல் துறை ரோட்டை சார்ந்த செல்வராஜ் மகன் சரவணன், இவர் சம்பவத்தன்றுதனது நண்பருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது  மேல தெருவைச் சார்ந்த செந்தில் மகன் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சரவணன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில்  முசிறி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News