செய்திகள்
விபத்து பலி

பென்னாகரம் அருகே வேன் மோதி பெயிண்டர் பலி

Published On 2020-11-18 07:12 GMT   |   Update On 2020-11-18 07:12 GMT
பென்னாகரம் அருகே வேன் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:

பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் முருகன் (வயது 23). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பென்னாகரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நாகமரை பிரிவு சாலையில் அந்த வழியாக வந்த ஆம்னிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News