சத்தியமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை கன மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட் களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்தது. 5 மணி வரை இடியுடன் கனமழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ஓட்டகுட்டை, புளியங்கோம்பை, ராஜன் நகர், திம்பம் மலைப்பகுதி, அரியப்பம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப் பகுதிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கிழ்ச்சி அடைந்தனர். மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-தாளவாடி- 3.2, சத்தியமங்கலம்-7, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம்-4.2.