செய்திகள்
விபத்து (மாதிரிப்படம்)

பாகிஸ்தானில் சாலை விபத்து - 13 பேர் பலி

Published On 2019-11-07 15:57 GMT   |   Update On 2019-11-07 15:57 GMT
பாகிஸ்தானில் பேருந்தும் ரிக்சாவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
கராச்சி:

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள மத்தியாரி மாவட்ட நெடுஞ்சாலையில் சென்ற ஒரு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த ரிக்சா மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அறிந்த சிந்து மாகாண மந்திரி சயீத் கானி, இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

பேருந்தும் ரிக்சாவும் மோதிய விபத்தில் 13 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News