உள்ளூர் செய்திகள்
.

போதையில் பைக் ஓட்டிய போலீஸ்காரர்- உயர் அதிகாரிகள் விசாரணை

Published On 2022-04-16 08:18 GMT   |   Update On 2022-04-16 08:18 GMT
குடி போதையில் தள்ளாடிய படி பைக் ஓட்டிய போலீஸ்காரரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிபவர் முத்தமிழ் (வயது 28),  இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு ஹெல்மட் அணியாமல் பிரபாத்தில் இருந்து ஜவுளிக்கடை பஸ்டாப் வரை பைக்கை தாறு மாறாக ஓட்டி சென்றார். 

அப்போது ஒரு தம்பதி உள்பட 4 பேரை இடித்து தள்ளினார். இதற்கிடையே குகை பஸ் டாப்பில் பைக்கை நிறுத்தி விட்டு வாகன ஓட்டிகள் , பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார். 

தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் முத்தமிழை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் முத்தமிழ் போதையில் வாகனம் ஓட்டியது , மக்களிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News