ஆன்மிகம்
புங்கனூர் மகாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சோமரசம்பேட்டை அருகே புங்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோமரசம்பேட்டை அருகே புங்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது.
இதையடுத்து மாலை 5 மணிக்கு ஸ்ரீமகா காளியம்மன் கோவில் எதிரே பந்தல் அமைக்கப்பட்டு, அதில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வேதமந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட்டது.
இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாலை 5 மணிக்கு ஸ்ரீமகா காளியம்மன் கோவில் எதிரே பந்தல் அமைக்கப்பட்டு, அதில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வேதமந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட்டது.
இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.