செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

கொரோனாவில் இருந்து விடுபட்ட சச்சின் தெண்டுல்கர் வீடு திரும்பினார்

Published On 2021-04-08 15:42 GMT   |   Update On 2021-04-08 15:42 GMT
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடிய சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். கடந்த மாதம் ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடபெற்றது. இதில் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.

போட்டி முடிந்து வீடு திரும்பிய சச்சின் தெண்டுல்கர், கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதன்பின் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஏப்ரல் 2-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டதாகவும், வீட்டிற்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், குணமடையும் வரை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News