செய்திகள்
தற்கொலை

தேனி அருகே குடி பழக்கத்தால் 2 பேர் தற்கொலை

Published On 2019-11-04 09:57 GMT   |   Update On 2019-11-04 09:57 GMT
தேனி அருகே குடி பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் ஐ.டி.ஐ. தெருவை சேர்ந்த சரவணன் என்ற குப்பமுத்துவேல் (வயது49). குடி பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக போதையில் தனது வீட்டில் தூங்கியவர் எழுந்திருக்க வில்லை. இதனால் அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பிச்சைமணி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் இந்திராநகரை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (38). இவருக்கு சபிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையானவர். சம்பவத்தன்று தேவதானப்பட்டியில் உள்ள தனது தோட்டத்தை பார்க்க காரில் சென்றார். அங்கே மது அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார்.

கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News