தொழில்நுட்பம்
டொனால்டு டிரம்ப்

டிக்டாக் தடை விவகாரத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை - டிரம்ப் அதிரடி

Published On 2020-09-11 07:00 GMT   |   Update On 2020-09-11 07:00 GMT
டிக்டாக் செயலியின் தடை விவகாரத்தில் அதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.


சீன நிறுவனமான பைட்-டேன்ஸ் தனது டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். டிக்டாக் தடை உறுதியாவது, செயலியை விற்பனை செய்வது தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார். 

அதிபர் டிரம்ப் கருத்து டிக்டாக் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பைட்-டேன்ஸ் நிறுவனம் தனது டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 



டிரம்ப்பின் முந்தைய உத்தரவின் படி டிக்டாக் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்  விற்பனை செய்ய வேண்டும். இதுவரை டிக்டாக்கை வாங்குவது பற்றி எந்த நிறுவனமும் இறுதியான முடிவை அறிவிக்கவில்லை. 

இதுவரை வெளியான தகவல்களின் படி டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Tags:    

Similar News