ஆன்மிகம்
கல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது..

கல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது..

Published On 2019-09-17 07:04 GMT   |   Update On 2019-09-17 07:04 GMT
பெண்ணிற்கு பொருத்தமான, மாதவிலக்கு இல்லாத நாளாகத் தேர்ந்தெடுத்து அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்து திருமண ஓலை எழுத வேண்டும்.
தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகத்தை கொடுத்துப் பொருந்துகிறதா? என்று பார்ப்பார்கள். நல்ல பொருத்தமாக இருந்தால் மணமகளுக்கு மணமகனை பிடிக்கிறதா? என்றும், மணமகனுக்கு மணமகளைப் பிடிக்கிறதா? என்றும் கேட்டு முடிவு செய்து, அதன்பிறகு நிச்சயதார்த்தத்தை செய்ய முடிவெடுப்பார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது, மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பார்கள், குறித்து முடித்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பர். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது கீழிருந்து மேல்நோக்கி மஞ்சள் தடவ வேண்டும்.

பெண்ணிற்கு பொருத்தமான, மாதவிலக்கு இல்லாத நாளாகத் தேர்ந்தெடுத்து அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்து திருமண ஓலை எழுத வேண்டும்.

அதை வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து விநாயகர் படத்தின் முன்னால் நின்று சம்பந்தம் செய்து கொள்பவர்கள் ஒருவருக்கொருவர் தாம்பாளத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிக்கும் போது நேர்மறைச் சொற்களையே பேச வேண்டும்.
Tags:    

Similar News