செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்த கணவரின் கள்ளக்காதலி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கறுத்தை அறுத்த கணவரின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
கொடுங்கையூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி முனியம்மாள். நுங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மனைவி பிரியா. இருவரும் தோழிகள். பிரியாவுக்கும், முனியம்மாள் கணவர் கார்த்திக்குக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த முனியம்மாள் பிரியாவை கண்டித்தார்.
நேற்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1-வது பிளாட் பாரத்தில் முனியம்மாள், கார்த்திக் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரியா, முனியம்மாள் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரியா மறைத்து வைத்து இருந்த கத்தியால் முனியம்மாள் கழுத்தை அறுத்தார். முனியம்மாளை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பஸ் நிலைய போலீசார் பிரியாவை கைது செய்தனர்.
கொடுங்கையூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி முனியம்மாள். நுங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மனைவி பிரியா. இருவரும் தோழிகள். பிரியாவுக்கும், முனியம்மாள் கணவர் கார்த்திக்குக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த முனியம்மாள் பிரியாவை கண்டித்தார்.
நேற்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1-வது பிளாட் பாரத்தில் முனியம்மாள், கார்த்திக் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரியா, முனியம்மாள் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரியா மறைத்து வைத்து இருந்த கத்தியால் முனியம்மாள் கழுத்தை அறுத்தார். முனியம்மாளை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பஸ் நிலைய போலீசார் பிரியாவை கைது செய்தனர்.