செய்திகள்
கைது

கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-11-24 07:23 GMT   |   Update On 2021-11-24 07:23 GMT
ஈரோட்டில் கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). லேத் பட்டறை தொழிலாளி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு 17 வயது கல்லூரி மாணவியிடம் பழகி வந்தார்.

இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த 31-ந் தேதி கடத்திச் சென்றார். பின்னர் அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஈரோட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியையும் போலீசார் மீட்டனர். மாணவியை கடத்தி திருமணம் செய்ததற்காக பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News