ஆன்மிகம்
குழுந்தாளம்மன்

புள்ளம்பாடியில் குழுந்தாளம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-30 05:02 GMT   |   Update On 2021-04-30 05:02 GMT
புள்ளம்பாடியில் உள்ள குழுந்தாளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 20-ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
புள்ளம்பாடியில் உள்ள குழுந்தாளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 20-ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் 8 நாட்கள் சாமிக்கு தினசரி பூஜைகள் செய்யப்பட்டது.

27-ந்தேதி அம்மனுக்கு மறுகாப்பு கட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அன்னவாகனத்திலும், நேற்று மயில் வாகனத்திலும் அலங்கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் அம்மனை வணங்கி சென்றனர்.

பக்தர்கள் இன்றி வருகிற 5-ந்தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 6-ந்தேதி இரவு 7.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் அம்மன் எழுந்தருள்வார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைதுறை செயல்அலுவலர் மனோகரன், ஆலய திருப்பணி குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News