செய்திகள்
விபத்து

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல் - 8 பேர் காயம்

Published On 2019-10-15 10:10 GMT   |   Update On 2019-10-15 10:10 GMT
ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் 8 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனியில் இருந்து செங்கோட்டைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை தேனியை சேர்ந்த டிரைவர் ராதாகிருஷ்ணன்(வயது49) என்பவர் ஓட்டினார். கண்டக்ராக விஜயகுமார் என்பவர் இருந்தார். பஸ் தேனி-மதுரை சாலையில் திம்மரசநாயக்கனூர் விளக்கு அருகே வந்தபோது அந்த வழியே ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

எதிர்பாராதவிதமாக லாரி அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த ராஜபாளையம் சேர்மத்துரை(37), ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணம்மாள்(35), சிவகாசி எம்.புதுப்பட்டி வீரசின்னம்மாள், கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கருப்பையா(49), கம்பம் பாரதியார் நகர் கருப்பசாமி மனைவி ராஜலட்சுமி(30), கன்னிசேர்வைபட்டி முருகன் மனைவி கவிதா(31), கணேசன் மனைவி நந்தினி(35), லட்சுமணன் மனைவி நாகம்மாள் ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி அரசு பஸ் டிரைவர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கு காரணமாக கண்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News