செய்திகள்
கோப்புப்படம்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-02-21 17:47 GMT   |   Update On 2021-02-21 17:47 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் காந்தி மனைவி மகேஸ்வரி (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News