உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் வாலிபரை தாக்கிய கும்பல்- 6 பேருக்கு வலைவீச்சு
ஆறுமுகநேரியில் வாலிபரை தாக்கிய 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேயன்விளையை சேர்ந்த வள்ளல் சிவானந்த பெருமாள் (27). இவர் சம்பவத்தன்று இரவு ஊர் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவானந்த பெருமாள் மீது உரசியபடி சென்றுள்ளது. இதனை அவர் தட்டிக்கேட்டுள்ளார்.
உடனே வெங்கடேஷ் அங்கு தனது நண்பர்களை வரவழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களால் தாக்கப்பட்ட சிவானந்த பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் மற்றும் வாசு, விக்னேஷ், வசந்த் நரேந்திரன், சிவபாலன், முருகேசன் ஆகியோர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி பேயன்விளையை சேர்ந்த வள்ளல் சிவானந்த பெருமாள் (27). இவர் சம்பவத்தன்று இரவு ஊர் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவானந்த பெருமாள் மீது உரசியபடி சென்றுள்ளது. இதனை அவர் தட்டிக்கேட்டுள்ளார்.
உடனே வெங்கடேஷ் அங்கு தனது நண்பர்களை வரவழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களால் தாக்கப்பட்ட சிவானந்த பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் மற்றும் வாசு, விக்னேஷ், வசந்த் நரேந்திரன், சிவபாலன், முருகேசன் ஆகியோர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.