செய்திகள்
அவினாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- டிரைவர் காயம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
அவினாசி:
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த மார்கண்டேயன் மகன் சிவக்குமார் (வயது 36). இவர் தனது வாடகை காரில் வாடிக்கையாளருடன் கன்னியாகுமரியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்தார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு விட்டு கோவை மாவட்டம் துடியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் அரசுப்பணியாளர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த சிவக்குமார் லேசான காயமடைந்தார். இது பற்றி தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் காரை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த மார்கண்டேயன் மகன் சிவக்குமார் (வயது 36). இவர் தனது வாடகை காரில் வாடிக்கையாளருடன் கன்னியாகுமரியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்தார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு விட்டு கோவை மாவட்டம் துடியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் அரசுப்பணியாளர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த சிவக்குமார் லேசான காயமடைந்தார். இது பற்றி தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் காரை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.