ஆன்மிகம்
ஆரணி சீனிவாச பெருமாள் கோவிலில் 7 வாகனங்களில் சாமி வீதி உலா
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் 7 வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் சுவாமி மாட வீதியின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து சூரியபிரபை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சந்திரபிரபை வாகனம் என 7 வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் சுவாமி காலை முதல் இரவு வரை மாட வீதியின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சூரியபிரபை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சந்திரபிரபை வாகனம் என 7 வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள் சுவாமி காலை முதல் இரவு வரை மாட வீதியின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.