செய்திகள்
மழை

வேதாரண்யத்தில் இடி-மின்னலுடன் மழை

Published On 2019-11-11 09:58 GMT   |   Update On 2019-11-11 09:58 GMT
வேதாரண்யம், செம்போடை, தென்னாடர், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இடி- மின்னலுடன் ஒருமணிநேரம் மழை பெய்தது.

வேதாரண்யம்:

தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதையொட்டி நாகை- தஞ்சை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் புல்புல் புயல் எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டு துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களது விசைப்படகுகளையும், பைபர் படகுகளையும் கரையில் நிறுத்தி விட்டு படகு பராமரிப்பு, வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே கரியாபட்டினம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது.வேதாரண்யம், செம்போடை, தென்னாடர், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இடி- மின்னலுடன் ஒருமணிநேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளிலும் மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தொடர்ந்து மீன்பிடித் தொழில் முடங்கி உள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags: