ஆட்டோமொபைல்
ஹோண்டா PCX

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்ற ஹோண்டா

Published On 2021-05-14 09:31 GMT   |   Update On 2021-05-14 09:31 GMT
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.


ஹோண்டா நிறுவனம் PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான இந்திய காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வகையில் ஹோண்டாவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.



முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹோண்டா PCX ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதே ஸ்கூட்டர் 20177 டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 41 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஏசி மோட்டார் 18 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News