ஆன்மிகம்
நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் முதல் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-09-21 06:35 GMT   |   Update On 2020-09-21 06:35 GMT
பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நித்ய கல்யாணப்பெருமாள் முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
காரைக்கால் பாரதியார் வீதியில் பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் நித்ய கல்யாணப்பெருமாளுக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, மூலவரான ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து உற்சவரான நித்ய கல்யாணப்பெருமாள் முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

வழிபாடு ஏற்பாடுகளை, கோவில்கள் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News