ஆன்மிகம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் பத்து ஆபத்சகேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் பத்து ஆபத்சகேஸ்வரர் கோவிலில் விக்கிரகங்களுக்கு மலர்களால் பூஜை செய்யப்பட்ட பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம் மஞ்சள்நீர், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவில்பத்து ஆபத்சகேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும், கொரோனாவில் இருந்து விடுபட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டி கோவிலின் முன் மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவிலின் முன் மண்டபத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், ஆனந்தவல்லி அம்மன், சண்டிகேஸ்வரர், நடராஜர், முருகன் வள்ளி, சுந்தரர், பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர் அய்யனார் உள்ளிட்ட விக்கிரகங்கள் எழுந்தருள செய்யப்பட்டன. விக்கிரகங்களுக்கு மலர்களால் பூஜை செய்யப்பட்ட பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம் மஞ்சள்நீர், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கோவிலில் ஓதுவார்கள் திருமுறை பாடினர். முன்னதாக பூதலூர் அக்ரகாரம் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம், வாணவேடிக்கை முழங்க சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.
கோவிலின் முன் மண்டபத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், ஆனந்தவல்லி அம்மன், சண்டிகேஸ்வரர், நடராஜர், முருகன் வள்ளி, சுந்தரர், பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர் அய்யனார் உள்ளிட்ட விக்கிரகங்கள் எழுந்தருள செய்யப்பட்டன. விக்கிரகங்களுக்கு மலர்களால் பூஜை செய்யப்பட்ட பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம் மஞ்சள்நீர், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கோவிலில் ஓதுவார்கள் திருமுறை பாடினர். முன்னதாக பூதலூர் அக்ரகாரம் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம், வாணவேடிக்கை முழங்க சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.