செய்திகள்
ஐந்து மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகும் நிலையில் ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாவின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினா். என்றாலும் முகுது வலி அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இருந்து முதுகு வலியால் விலகியுள்ளார்.
முதுகு வலியின் வீரியம் குறித்து அறிய, லண்டன் சென்று அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற டாக்டரிடம் ஆலோசனை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பின்னர் நடைபெற இருக்கும் வங்காளதேச தொடரில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சுமார் ஐந்து மாதங்கள் வரை ஹர்திக் பாண்டியாவால் விளையாட முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்று திரும்பிய பின்னர்தான், ஹர்திக் பாண்டியா காயம் குறித்து முழு விவரம் தெரிய வரும்.
அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினா். என்றாலும் முகுது வலி அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இருந்து முதுகு வலியால் விலகியுள்ளார்.
முதுகு வலியின் வீரியம் குறித்து அறிய, லண்டன் சென்று அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற டாக்டரிடம் ஆலோசனை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பின்னர் நடைபெற இருக்கும் வங்காளதேச தொடரில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சுமார் ஐந்து மாதங்கள் வரை ஹர்திக் பாண்டியாவால் விளையாட முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்று திரும்பிய பின்னர்தான், ஹர்திக் பாண்டியா காயம் குறித்து முழு விவரம் தெரிய வரும்.