குழந்தை பராமரிப்பு
பிறந்த குழந்தைக்கு எப்போது கண்ணீர் உருவாகும்?

பிறந்த குழந்தைக்கு எப்போது கண்ணீர் உருவாகும்?

Published On 2022-03-29 07:26 GMT   |   Update On 2022-03-29 07:26 GMT
குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.
குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். அப்போது அதன் கண்களில் இருந்து கண்ணீர் உருவாகும் என்று நிறைய பேர் கருதுகிறார்கள். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.

குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகுதான் குழந்தையின் உடலில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் மூலம் கண்ணீரின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கும்.

ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை அழும் போது, அதன் கண்ணீரில் இருந்து அதிக உப்பு பொருட்கள் வெளிப்படும். நாளடைவில் இயல்பான கண்ணீர் வெளிப்பட தொடங்கிவிடும்.
Tags:    

Similar News