ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஞானப்பிரசுனாம்பிகை தாயார்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவ நிறைவு விழா

Published On 2021-10-16 05:53 GMT   |   Update On 2021-10-16 05:53 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து உற்சவமூர்த்தி சன்னதி வளாகத்தில் இருந்து பால ஞானாம்பிகை சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம், மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் நடந்தது.

நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில் அதிகாரி நெத்தி.ராஜு மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News