உள்ளூர் செய்திகள்
மணமகன்- மணமகள் வீட்டார் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட போது எடுத்த படம்.

ஊத்தங்கரை அருகே பரபரப்பு: சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி குடும்பத்தினர் திடீர் மோதல்

Published On 2022-05-05 08:03 GMT   |   Update On 2022-05-05 08:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி குடும்பத்தினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த  சந்தை கொட்டாவூர்  கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி. இவரும்  ஏ.கே .மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்  என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு கார்த்திக், காதலி சத்தியவாணியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 
இது குறித்து பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் காதல் ஜோடியை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து அந்த காதல்ஜோடியை உறவி னர்கள் முன்பு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை நேற்று பதிவு திருமணம் செய்வ தற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டாரும் இணைந்து வந்தனர். 
இந்த நிலையில் மணமகன் சாட்சி  கையொப்ப மிட மாமனாரை அழைத்துள்ளார்.

அப்போது  மணமகன் மாமனாரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், மணப்பெண்ணிடம் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.
இதை கேட்டு மணமகனின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது இருதரப்பினர் கடுமையாக மோதி கொண்டனர். 

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் பெண்ணின் உறவினர்கள் மணமகனை கட்டையால் தாக்க முயன்றனர். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். ஒருவரையொருவர் தாக்கி  கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அவர்களுக்குள் சமாதானம் பேசினர். இதையடுத்து மணமகன், மாமனார் காலில் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு மீண்டும் பதிவு திருமணம் அமைதியாக நடந்தது.
இதைத்தொடர்ந்து மணமகள்-மணமகன்  இருவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி குடும்பத்தினர் ஒருவரையொருவர் தாக்கிய சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:    

Similar News