வழிபாடு
இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 2007 திருவிளக்கு பூஜை
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழாவையொட்டி 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 23 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று 2007 திருவிளக்குப் பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் அம்மன் எழுந்தருளியுள்ள விழா பந்தலில் ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். முதல் தீபத்தை குலசேகரம் உண்ணியூர்கோணம் அஸ்வதி பெட்ரோலியம் நிர்வாகி குமாரி விஜயன் ஏற்றினார். பெட்ரோலியம் உரிமையாளர் ஆர். விஜயன் நேர்ச்சை செய்தார். திருவிளக்கு பூஜையை நெட்டாங்கோடு சாரதா தேவி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதா நடத்தினார்.
நிகழ்ச்சியில் அம்மன் எழுந்தருளியுள்ள விழா பந்தலில் ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். முதல் தீபத்தை குலசேகரம் உண்ணியூர்கோணம் அஸ்வதி பெட்ரோலியம் நிர்வாகி குமாரி விஜயன் ஏற்றினார். பெட்ரோலியம் உரிமையாளர் ஆர். விஜயன் நேர்ச்சை செய்தார். திருவிளக்கு பூஜையை நெட்டாங்கோடு சாரதா தேவி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதா நடத்தினார்.