செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை - காங்கயம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2021-09-21 10:51 GMT   |   Update On 2021-09-21 10:51 GMT
நாளை 22 - ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 22 - ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்லப்பம்பாளையம், சின்னபொம்மன்சாலை, வீரல்பட்டி, புளியம்பட்டி, குறுஞ்சேரி, பொன்னேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளார் ராம்பிரகாஷ் அறிவித்துள்ளார்.

காங்கயம் கோட்டம் பெரியார் நகர், புதுப்பை துணை மின் நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News