செய்திகள்
கோப்புப்படம்

வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2019-11-30 11:27 GMT   |   Update On 2019-11-30 11:27 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் செட்டிபுலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 85). இவர் நேற்று மருதூர் வடக்கு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று உள்ளார். நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி கால் கழுவியுள்ளார். அப்போது தவறி குளத்திற்குள் விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் சென்று பார்த்த அவரது மகள் வீரம்மாள் குளத்தில் விழுந்து இறந்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளத்தில் இறந்து கிடந்த வீரம்மாள் உடலை மீட்டனர். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News