செய்திகள்
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலி
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
செங்கோட்டையை அடுத்த இலத்தூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் சூர்யா(வயது 10) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சூர்யா தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கோவிலின் சுற்றுச்சுவரில் இருந்து தவறி கீழே விழுந்தான்.
இதில் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.