செய்திகள்
கைது

சேலத்தில் ரூ.5¾ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- மளிகைக்கடைக்காரர் கைது

Published On 2021-01-12 07:49 GMT   |   Update On 2021-01-12 07:49 GMT
சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5¾ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே உள்ள ரெங்காநகரை சேர்ந்தவர் சல்சார் பாபு (வயது 38). இவர் வீட்டையொட்டி மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று காலை அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஒரு அறையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து ரூ.5¾ லட்சம் மதிப்பிலான 19 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சல்சார்பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், சல்சார் பாபுவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News