செய்திகள்
தற்கொலை

பெரம்பலூர் அருகே தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை

Published On 2021-10-24 10:42 GMT   |   Update On 2021-10-24 10:42 GMT
பெரம்பலூர் அருகே தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ராயல் நகரை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவரது மகன் முஜிபுர் ரகுமான் (வயது 21). இவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு நேற்று முன்தினம் தனது தாய் மெகராஜ் நிஷாவிடம் ரூ.2 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை கருதி தற்போது சுற்றுலா செல்ல வேண்டாம் என்று முஜிபுர் ரகுமானிடம், அவரது தாய் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முஜிபுர் ரகுமான் வீட்டில் தனது அறையில் தான் கட்டியிருந்த வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News